Thursday 15 September 2011

kavidhai

=======================================================================
காதல்

காதல் !
பாற்கடல் அமிழ்தா?
பாம்பின் நஞ்சா ?
ருசித்ததில்லை இதுவரை ....

காதல் !
சுவனத்தின் வாயிலா ?
நரகத்தின் திறவுகோலா ?
தெளிவு இல்லை ...

காதல் !
பூங்காவின் தென்றலா ?
பாலைவனப் புயலா ?
புரியாத புதிர் ...

காதலால் - நான்
பாதிக்கபட்டவனும் இல்லை!
பயன் அடைந்தவனும் இல்லை !
பார்வையாளன் ....

நீங்கள்
பாதிக்கப்பட்டிருப்பின் என்
அனுதாபங்கள் - பயனடைந்திருப்பின்
வாழ்த்துக்கள் ....

=======================================================================

No comments:

Post a Comment